7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 5 ஏப்ரல், 2018

திலீபன் நினைவிடத்தில் ஆசி பெற்ற 7 வயது சிறுவன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ளது.

திலீபனின் பிறந்தநாள் அன்றும் இவருடைய நினைவு நாள் அன்றும் தான் அவ்விடத்தை நோக்கி பெரும்பாலும் மக்கள் வருவார்கள்.

ஆனால் அண்மையில் திலீபனின் நினைவிடத்திற்கு வந்த சிறுவன் அனைவர் மனதிலும் இடம்பிடித்ததுடன், ஒரு கணம் சிந்திக்கவும் வைத்து விட்டார்.

யாழில்  7 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடைய பிறந்த தினத்தில் தியாகி திலீபனின் நினைவிடத்தை தேடிச் சென்று, ஆசி பெற்றுள்ளமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்