ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நேற்றையதினம் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.
இதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார்.
இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

