7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

போர்க்குற்ற ஆவணப்படத்தை தயாரித்தவருக்கும் கொரோனா பாதிப்பு

இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் – 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற பெயரில் வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தார்.
ஈரானுக்கு தேர்தல் வேலைக்காக சென்றிருந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்