திருகோணமலை
மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் வாழ் மக்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று சோலையடி,செல்வநாயகபுரம், நித்தியபுரி ஆகிய கிராமங்களில் 45 குடும்பங்களுக்கு 1350ரூபாய் பெறுமதியான 5kg அரிசி, 3kg மா , 1kg சீனி, 1kg பருப்பு, 1/2kg சோயா, 150g தேயிலை, 1சோப் ஆகிய பொருட்கள் , , 60,750ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.



