7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 24 மார்ச், 2018

யாழ் பொது நூலகத்தில் குழப்பம் விளைவித்த நடிகர் ஆர்யா

யாழ் பொது நூலகத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நுழைந்தமையால் வாசகர்கள் மற்றும் சுற்றுலாவிகள் விசனமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

இவர்களுக்கு நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்துகொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும் பொது நூலக ஊழியர்கள் சிலர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாவிகள் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தினர் என்று வாசகர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1/2மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது. அதற்கிடையில் நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பே இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

படப்பிடிப்புக்குழு இங்கு வருகைதருவதற்கு முதலில் எம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர். அது சம்பந்தமாக மாநகர ஆணையாளரிடமே தொடர்புகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தேன்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்