7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 28 மார்ச், 2018

திறந்துவைக்கப்பட்ட தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைமை பணிமனை

அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகத் தொழிற்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை யாழ்ப்பாணத்தில் நேற்று (27) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அரசடி வீதி கந்தர்மடத்தில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ம.தியாகராஜா ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்