காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி ஊடான
போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பிதமடைந்தது. இதையடுத்து, பேரணியின் நகர்விற்கு ஏற்க, மாற்று பாதையூடான போக்குவரத்து ஒழுங்குகளை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம், தற்போது பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
காணாமல் போனவர்களிற்கான பணியகத்தை நிராகரிக்கிறோம், ஐ.நாவில் காலஅவகாசம் வழங்கக்கூடாது, காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசு பொறுப்பக்கூற வேண்டும் என வானதிர கோசங்கள் எழுக்கப்பட்டன.